கெஹலியவுக்கு மீண்டும் விளக்கமறியல்

முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல மற்றும் 07 சந்தேகநபர்கள் ஜூலை 25 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

சந்தேகநபர்களை மாளிகாகந்த நீதவான் நீதிமன்றில்  (12) வெள்ளிக்கிழமை பொலிஸார் ஆஜர்படுத்திய போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

தரமற்ற இம்யூனோகுளோபுலின் இறக்குமதி செய்யப்பட்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டில் கெஹலிய ரம்புக்வெல்ல கைது செய்யப்பட்டதுடன், இந்த இறக்குமதியில் பாரிய ஊழல் – மோசடிகள் இடம்பெற்றுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

கெஹலிய ரம்புக்வெல்லவுக்கு தொடர்ச்சியாக விளக்கமறியலில் நீடிக்கப்பட்டு வருவதுடன், அவரது பிணைக்களும் நிராகரிக்கப்படுகின்றமை சுட்டிக்காட்டத்தக்கது.

Recommended For You

About the Author: admin