T20 தலைமைப் பதவியில் இருந்து வனிந்து ஹசரங்க இராஜினாமா

இலங்கை அணியின் நட்சத்திர வீரர் வனிந்து ஹசரங்க டி20 அணி தலைவர் பதவியிலிருந்து விலகியுள்ளார்.

வனிந்து ஹசரங்கவின் இராஜினாமாவை ஏற்றுக்கொண்டதாக இலங்கை கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரித்துள்ளது.

என்றாலும், வனிந்து ஹசரங்க டி20 கிரிக்கெட் அணியில் தொடர்ந்நது விளையாடுவார் என்றும் கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபை கூறியுள்ளது.

இலங்கை அணியில் சமகாலத்தில் விளையாடும் சிறந்த சகலத்துறை வீரராக வனிந்து ஹசரங்க இருப்பதுடன், சகலத்துறை ஆட்டக்காரர்களுக்கான ஐசிசி தரவரிசையிலும் முதலிடத்தில் உள்ளார்.

இவரது திடீர் முடிவால் இலங்கை ரசிகர்கள் சோகத்தில் உள்ளனர். இலங்கை அணியை வலுவான அணியாக கட்டியெழுப்ப வேண்டிய முக்கிய பொறுப்பிலிருந்து இவர் விலகுவதானது ஏனைய வீரர்களுக்கு சோர்வை ஏற்படுத்தும் என கிரிக்கெட் ஆர்வலர்கள் கவலையடைந்துள்ளனர்.

Recommended For You

About the Author: admin