LPL – இறுதி ஓவரில் திரில் வெற்றி: ஜப்னா கிங்ஸ் முதலிடம்

லங்கா பிரீமியர் லீக் தொடரில் காலி மார்வெல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் ஜப்னா கிங்ஸ் அணி ஐந்து விக்கெட்டுகளால் வெற்றிபெற்றுள்ளது.

இறுதி ஓவரில் 13 ஓட்டங்களை பெற்றால் வெற்றி என்ற நிலையில், இரண்டு பந்துகள் மீதமிருக்கையில் ஜப்னா அணி வெற்றியை பதிவுசெய்துள்ளது.

தம்புளையில் இடம்பெற்ற இந்தப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற ஜப்னா அணி முதலில் பந்துவீசியது.

இதன்படி, முதலில் துடுப்பெடுத்தாடிய காலி மார்வெல்ஸ் 20 ஓவர்களில் நிறைவில் ஐந்து விக்கெட்டுகளை இழந்து 187 ஓட்டங்களை குவித்திருந்தது.

அந்த அணியின் டிம் சீஃபர்ட் ஆட்டமிழக்காது 104 ஓட்டங்களை குவித்திருந்தார்.

ஜப்னா அணி சார்பில் அஸ்மத்துல்லா ஒமர்சாய் இரண்டு விக்கெட்டுகளை கைப்பற்றியிருந்தார்.

இந்நிலையில், 188 என்ற வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய ஜப்னா கிங்ஸ் அணியினர் 19.4 ஓவர்களில் ஐந்து விக்கெட்டுகளை இழந்து 191 குவித்து வெற்றிபெற்றிருந்தனர்.

ஜப்னா அணி சார்பில் ரிலீ ரோசோவ் 67 ஓட்டங்களையும், இறுதி நேரத்தில் அதிரடியாக துடுப்பெடுத்தாடிய அஸ்மத்துல்லா ஒமர்சாய் 13 பந்துகளில் 35 ஓட்டங்களையும் குவித்திருந்தனர்.

இந்த வெற்றியுடன் ஜப்னா கிங்ஸ் புள்ளிப்பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளது.

இந்தப் போட்டியின் ஆட்டநாயகன் விருதை அஸ்மத்துல்லா ஒமர்சாய் பெற்றிருந்தார்.

Recommended For You

About the Author: admin