காத்தான்குடியில் திடீர் சுற்றவளைப்பில் கைதான நபர்கள்

காத்தான்குடியில் சட்டவிரோத பொருட்களுடன் சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நேற்றிரவு காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஹைராத் நகர்,டெலிகாம் வீதி, கடற்கரை வீதி, நூராணியா பிரதேசங்களில் பொலிசார் நடத்தி திடீர் சுற்றி வளைப்பின் போது இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஐஸ் போதை பொருளுடன் நால்வரும், போதை மாத்திரைகளுடன் ஒருவருமாக ஐவரை காத்தான்குடி பிரதேசத்தில் வைத்து கைது செய்துள்ளதாக காத்தான்குடி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஜி கஜநாயக்க தெரிவித்தார்.

கைதான சந்தேக நபர்களிடமிருந்து ஒருதொகை ஐஸ் போதை பொருள் மீட்கப்பட்டுள்ளதுடன், ஒருவரிடமிருந்து ஆறு போதை மாத்திரைகளையும் பொலிசார் கைப்பற்றியுள்ளனர்.

கைதான சந்தேக நபர்களை மட்டக்களப்பு நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை காத்தான்குடி பொலிஸார் மேற்கொண்டுள்ளதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர்.

Recommended For You

About the Author: admin