இறந்தவர்களை நினைவுகூரும் மனிதாபிமானம் இலங்கை அரசாங்கத்திற்கு ஏற்படவில்லை

தமிழ் மக்களின் அரசியல் தீர்வு விடயத்தில் கனடா தனது பூரண ஆதரவை வழங்கும் என இலங்கைக்கான கனேடிய உயர்ஸ்தானிகர் தெரிவித்துள்ளார்.

இலங்கைக்கான கனேடிய உயர்ஸ்தானிகர் எரிக் வோல்ஸ் நல்லை ஆதீனத்திற்கு விஜயம் செய்த போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அதன் போது, இறந்தவர்களை அஞ்சலிக்கும் மனிதாபிமானம் இலங்கை அரசாங்கத்திற்கு இன்னும் ஏற்படவில்லை எனவும் இலங்கைக்கான கனடிய உயர்ஸ்தானிகரிடம் அகில இலங்கை இந்துமாமன்றத்தின் தலைவர் கலாநிதி ஆறு திருமுருகன் ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

இது தொடர்பில் தொடர்ந்தும் கருத்துத் தெரிவித்த அவர்,

“இலங்கையில் தமிழ் மக்களுக்கு எதிரான செயற்பாடுகள் தொடர்ந்து இடம் பெற்று வருகிறது.

இறுதி யுத்தத்தில் இறந்த தமிழ் மக்களை நினைவு கூருவதற்கு இலங்கை அரசாங்கம் தொடர்ந்தும் தடை செய்து வருகிறது.

இறந்தவர்களை நினைவு கூரும் மனிதாபிமான செயற்பாட்டை இலங்கை அரசாங்கத்திற்கு விளங்கப்படுத்தி நினைவு கூரும் உரிமையைப் பெற்றுத் தாருங்கள்.

அது மட்டுமல்லாது தமிழ் மக்கள் எதிர்பார்க்கும் அரசியல் தீர்வு இதுவரை எட்டப்படாத நிலையில் கனேடிய அரசாங்கம் தமிழ் மக்களின் தீர்ப்பு விடயம் தொடர்பில் தலையீடு செய்ய வேண்டும்.

ஏனெனில் கனடாவில் சுமார் மூன்று இலட்சம் தமிழ் மக்கள் வாழ்ந்து வரும் நிலையில் கனேடிய அரசாங்கத்திற்கு தமிழ் மக்களின் தீர்வு விடயத்தில் தலையீடு செய்வதற்கு உரிமை உள்ளது” எனவும் கனேடிய உயர்ஸ்தானிகரிடம் தெரிவித்துள்ளார்.

Recommended For You

About the Author: admin