யாத்திரை சென்று கொண்டிருந்த வேன் விபத்து – ஒருவர் உயிரிழப்பு

கல்கமுவ, மீஓயாவை அண்மித்த பகுதியில் இன்று (26) காலை இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இதில் மேலும் 13 பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

யாத்திரை சென்று கொண்டிருந்த வேளையில் வேன் ஒன்று வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளானதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

மேலும், வேனின் சாரதி உறங்கியதினாலேயே விபத்துக்குக் காரணம் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

விபத்துக்குள்ளான வேன், கார் பாதெனியவில் இருந்து அனுராதபுரம் நோக்கி பயணித்துள்ளது

இது மீஓயா பாலத்தில்மோதி, சாலையை விட்டு விலகி மரத்தில் மோதியது. விபத்தின் போது வேனில் சுமார் 15 பேர் இருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

எம்பிலிபிட்டிய பிரதேசத்தைச் சேர்ந்த 69 வயதுடைய நபரே விபத்தில் உயிரிழந்துள்ளார்.

காயமடைந்து கல்கமுவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டவர்களில் 07 பேர் மேலதிக சிகிச்சைக்காக அனுராதபுரம் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை கல்கமுவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Recommended For You

About the Author: admin