குசல் மற்றும் அசித அமெரிக்கா பயணம்

உலகக்கிண்ண கிரிக்கெட் தொடரில் பங்கேற்கவுள்ள இலங்கை அணி ஏற்கனவே அமெரிக்கா சென்றுள்ள நிலையில், குசல் மெண்டிஸ் மற்றும் அசித பெர்னாண்டோ ஆகியோர் தற்போது அணியில் இணைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

விசா பிரச்சினை காரணமாக இருவரும் இலங்கை அணியுடன் அமெரிக்கா பயணிக்க முடியாத நிலை ஏற்பட்டது.

இந்த பிரச்சினைக்கு தீர்வு காணப்பட்டுள்ள நிலையில், இருவரும் அமெரிக்காவுக்கு பயணித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதனிடையே, இலங்கை அணி பங்கேற்கும் முதல் பயிற்சிப் போட்டி எதிர்வரும் 28 ஆம் திகதி நெதர்லாந்துடனும், இரண்டாவது பயிற்சிப் போட்டி எதிர்வரும் 31ஆம் திகதி அயர்லாந்துடனும் நடைபெறவுள்ளது.

இந்த நிலையில், இலங்கை அணி தற்போது வட கரோலினாவில் பயிற்சியில் ஈடுபட்டு வருவதாக அறியமுடிகிறது.

Recommended For You

About the Author: admin