![](https://yarlvasal.lk/wp-content/uploads/2024/05/ree.jpeg)
வடக்கு – மெக்சிக்கோவில் தேர்தல் பிரச்சாரத்தின் போது ஏற்பட்ட அனர்த்தம் காரணமாக 9 பேர் வரை இதுவரையில் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
மேலும், 50ற்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
நேற்றுமாலை வீசிய பலத்த காற்று காரணமாக மேடை சரிந்து விழுந்தமையினாலேயு இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.
இந்த விபத்தின் போது, மெக்சிகோ ஜனாதிபதி வேட்பாளர் சரிவில் இருந்து அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியுள்ளார் எனவும் அந்த செய்தியில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதுதொடர்பில், சமூக ஊடகங்களில் வெளியான காணொளியில் , மக்கள் அலறியடித்து ஓடுவதையும் உலோக வாக்குச்சாவடிகளின் கீழ் இருந்து வெளியேறுவதையும் காணக்கூடியதாக இருந்தது.
இந்த விபத்து தொடர்பாக பலரும் தங்களின் இரங்கல்களை தெரிவித்துவருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.