இந்தியாவின் மும்பையில் விமானம் ஒன்று விபத்துக்குள்ளானதில் 39 ஃபிளமிங்கோ (Flamingos) பறவைகள் உயிரிழந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
300 பயணிகளுடன் சென்ற எமிரேட்ஸ் விமானம் மீது பறவைகள் மோதியதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்த சம்பவத்தை அடுத்து விமானம் பத்திரமாக தரையிறக்கப்பட்டது என்றும் அதில் பயணம் செய்த யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்றும் கூறப்படுகிறது.
மெலும் இது தொடர்பிலான காணொளிகள் தற்போது சமூக வலைத்தங்களில் உலாவி வருவதையும் காணக்கூடியதாக இருக்கின்றது.