காணாமல் போன சிறுவன் துறவியாக மீட்பு

நான்கு நாட்களுக்கு முன்னர் மதுரங்குளிய பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் இருந்து காணாமல் போன 12 வயதுடைய மாணவன், கதிர்காமம் தோசர்வெவ சதஹம் அரன என்ற விஹாரையில் துறவி நிலையில் காணப்பட்டதாக கதிர்காமம் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

குறித்த சிறுவனின் தாய் வெளிநாடு ஒன்றிற்கு வேலைக்கு சென்றுள்ளமையினால், அவர் பாட்டி மற்றும் தந்தையின் அரவணைப்பில் தான் இருந்துள்ளார்.

தொடர்ந்து, பாட்டியுடன் ஏற்பட்ட சிறிய பிரச்சினை காரணமாக வீட்டிலிருந்து ஓடிய சிறுவன் தற்போது, துறவியான நிலையில் பௌத்த விகாரையொன்றிலிருந்து மீட்க்கப்பட்டுள்ளார்.

சிறுவன் அங்கிருக்கும் விடயம் கேட்டு அழைத்து வருவதற்காக சென்ற தந்தையிடம் “தான் வீட்டிற்கு வர விரும்பவில்லை எனவும், துறவியாக ஆசைப்படுவதாகவும் தெரிவித்துள்ளார்.

அவரின் ஆசையை நிறைவேற்றுவதற்காக தற்போது கதிர்காமம் மஹியங்கனை விஹாரையில் சிறுவனை தலைமை விஹாராதிபதியிடம் ஒப்படைத்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

தொடர்ந்து “வீட்டிற்கு செல்ல விருப்பமா? என கேட்டபோதிலும் கூட, இல்லை நான் துறவியாவதற்கே ஆசைப்படுகின்றேன்” எனவும் தெரிவித்துள்ளார்.

Recommended For You

About the Author: admin