கொல்கத்தா நைட் ரைடர்ஸ் இறுதிப்போட்டிக்கு தகுதி

2024 ஆம் ஆண்டுக்கான இந்தியன் பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடரில் ஷாருக்கானின் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி இறுதிப் போட்டிக்கு தகுதிபெற்றுள்ளது.

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி, சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிகொண்டதை அடுத்து இவ்வாறு தகுதிபெற்றுள்ளது.

அகமதாபாத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 19.3 ஓவர்களில் 159 ஓட்டங்களை மாத்திரம் பெற்றுக்கொண்டது.

போட்டியின் ஆரம்பத்திலேயே முக்கிய துடுப்பாட்டக்காரர்களான டிராவிஸ் ஹெட் மற்றும் அபிஷேக் ஷர்மா ஆகியோரை ஆட்டமிழக்கச் செய்தமை சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் தோல்விக்கு முக்கிய காரணமாக அமைந்தது.

தொடர்ந்து 160 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 13.4 ஓவர்களில் இரண்டு விக்கெட்டுகளை மாத்திரம் இழந்து வெற்றி இலக்கைக் கடந்தது.

இதன்படி, கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி இந்தியன் பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடர் வரலாற்றில் இறுதிப்போட்டிக்கு தகுதி பெறும் நான்காவது சந்தர்ப்பம் இதுவாகும்.

Recommended For You

About the Author: admin