ஐ.பி.எல் தொடரில் முதல் விக்கெட்டை கைப்பற்றிய இலங்கை வியாஸ்காந்த்

ஐ.பி.எல் தொடரில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த இளம் வீரரான விஜயகாந்த் வியாஸ்காந்த் தனது முதலாவது விக்கெட்டை கைப்பற்றியுள்ளார்.

பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியிலேயே அவர் தனது முதலாவது விக்கெட்டினை கைப்பற்றினார்.

போட்டியில் வியாஸ்காந்த் வீசிய 14 ஆவது ஓவரின் இரண்டாவது பந்துவீச்சில் பிரப்சிம்ரன் சிங் பிடிகொடுத்து ஆட்டமிழந்தார்.

மேலும், விஜயகாந்த் வியாஸ்காந்த் ஐ.பி.ல் தொடரில் விளையாடும் இரண்டாவது போட்டி இதுவாகும்.

Recommended For You

About the Author: admin