புதிய கூட்டணியொன்று உருவாக்கப்படும்: சுசில் பிரேமஜயந்த

எதிர்வரும் தேர்தலுக்கு முகங்கொடுக்க புதிய கூட்டணியொன்று உருவாக்கப்படும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பதில் தலைவர் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வாவுடன் இன்று (14) காலை இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

அமைச்சர்களான சுசில் பிரேமஜயந்த மற்றும் நளின் பெர்னாண்டோ ஆகியோர் கலந்துரையாடலில் கலந்துகொண்டுள்ளனர்.

பாராளுமன்றத்தில் உள்ள சுயேட்சைக் குழு மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்பினர்களும் இதில் இணையவுள்ளதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

Recommended For You

About the Author: admin