நிறுத்தப்பட்ட திருமணம்: சிறுமியை கொலை செய்து தலையை கையோடு எடுத்துச்சென்ற மாப்பிள்ளை

திருமணம் நிறுத்தப்பட்ட விரக்தியில் மணமகளான 16 வயது சிறுமியின் தலையை வெட்டி கையோடு எடுத்துச் சென்ற மணமகனின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடக மாநிலம் குடகு மாவட்டத்தில் 32 வயதான வாலிபருக்கும் 16 வயதான சிறுமிக்கும் திருமணம் நடைபெறுவதற்கான நிச்சயதார்த்த ஏற்பாடுகள் நடைபெற்று வந்துள்ளது.

இந்நிலையில் 18 வயதுக்கு கீழிருந்த சிறுமிக்கு திருமண ஏற்பாடுகள் நடைபெற்று வருவதையறிந்த குழந்தைகள் நலத்துறை அதிகாரிகள் குறித்த நிச்சயதார்த்தத்தை பாதியில் நிறுத்தியுள்ளனர்.

நிச்சயதார்த்தம் பாதியில் நிறுத்தப்பட்ட விரக்தியிலிருந்த வாலிபர், அன்றிரவே சிறுமியின் வீட்டுக்குச் சென்று சிறுமியை கொலை செய்து கையை தலையோடு எடுத்துச் சென்றுள்ளார்.

கொலையை செய்துவிட்டு தலைமறைவான வாலிபரை தேடும் பணியில் பொலிஸார் ஈடுபட்டு வருகின்றனர்.

Recommended For You

About the Author: admin