அரசியல் அறிவுடன் மக்கள் சிந்திக்க வேண்டும்: கே.டி.லால்காந்த

நாட்டு மக்கள் அனைவரும் ஆயுதம் ஏந்த வேண்டும் என ஜே.வி.பி தெரிவித்துள்ளது.

ஆயுதம் ஏந்தினால் பிரச்சினை இல்லை, ஆனால் அரசியல் அறிவுடன் ஆயுதம் ஏந்த வேண்டுமே தவிர துப்பாக்கி எடுக்கக் கூடாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அண்மையில் இணைய ஊடகம் ஒன்றில் இடம்பெற்ற விவாதத்தில் கலந்துகொண்ட போதே முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் தேசிய மக்கள் சக்தியின் செயற்குழு உறுப்பினருமான கே.டி.லால்காந்த மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் தொடர்ந்தும் கருத்துத் தெரிவித்த அவர்,

நாட்டில் தற்போது இடம்பெறும் அராஜகங்களுக்கு முடிவுகட்ட மக்கள் ஆயுதம் ஏந்த வேண்டும்.

அதாவது, விவசாயிகள் அவர்கள் பயன்படுத்தும் ஆயுதங்களையும், இல்லத்தரசிகள் தமது சமையலறையில் தாம் பயன்படுத்தும் ஆயுதங்களையும் ஏந்த வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Recommended For You

About the Author: admin