ரஷ்யா – உக்ரைன் போரில் இலங்கை முப்படை வீரர்கள்

சட்டவிரோதமான வழிகளில் ரஷ்யா – உக்ரைன் போருக்காக ஓய்வு பெற்ற இலங்கை முப்படை வீரர்களை அனுப்பி ஆள் கடத்தலில் ஈடுபட்டவர்கள் தொடர்பான தகவல்களை பெறுவதற்கு விசேட பிரிவொன்றை அமைத்துள்ளதாக பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது.

அதன்படி, பல்வேறு வழிகளில் ரஷ்யா-உக்ரைன் போருக்குப் புறப்பட்ட முப்படைகளின் ஓய்வுபெற்ற இராணுவ வீரர்கள், அவர்கள் புறப்பட்ட திகதிகள், ஒருங்கிணைந்த நபர்கள், நிறுவனங்கள், தொலைபேசி எண்கள் உள்ளிட்ட அனைத்துத் தகவல்களும் பாதுகாப்பு அமைச்சின் 0112441146 என்ற தொலைபேசி எண்ணுக்கு உடனடியாக வழங்க வேண்டும் என தொடர்புபட்ட நபர்களின் குடும்ப உறுப்பினர்களிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மேலும், இந்த மனித கடத்தலில் ஈடுபடுபவர்கள் அல்லது அதற்கு ஆதரவானவர்கள் தொடர்பான தகவல்கள் இருந்தால், மேற்கண்ட தொலைபேசி எண்ணுக்கு தகவல் தெரிவிக்குமாறும் பாதுகாப்புச் செயலாளர் பொதுமக்களுக்கு அறிவுறுத்துகிறார்.

இது இலங்கைப் பிரஜைகளின் உயிரைப் பாதுகாக்கும் செயற்பாடு என்பதால், அனைவரும் விசேட கவனம் செலுத்தி தகவல்களை வழங்குமாறு கேட்டுக் கொள்ளப்படுவதாக பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது.

Recommended For You

About the Author: admin