ஜனாதிபதித் தேர்தல்: ‘செப்டெம்பர் 17 – ஒக்ரோபர் 16’ க்கு இடையில்

ஜனாதிபதி தேர்தல் நடைபெறும் காலத்தை தேர்தல்கள் ஆணைக்குழு இன்று வியாழக்கிழமை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல்.ரத்நாயக்கவால் கையொப்பதுடன் வெளியிட்டுள்ள இந்த அறிவிப்பில்,

இலங்கை அரசியலமைப்பு மற்றும் 1981 ஆம் ஆண்டின் ஜனாதிபதித் தேர்தல்கள் சட்டத்தின் இலக்கம் 5 இன் படி குறிப்பிட்ட கால எல்லைக்குள் ஜனாதிபதித் தேர்தலை நடத்தும் அதிகாரம் தேர்தல்கள் ஆணைக்குழுக்கு உட்பட்டது.

அதன் பிரகாரம் ஜனாதிபதித் தேர்தல் 2024 செப்டெம்பர் 17ஆம் திகதிக்கும் ஒக்ரோபர் 16 ஆம் திகதிக்கு இடையில் நடத்தப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

jh

Recommended For You

About the Author: admin