மாலே – கொழும்பு இடையே புதிய நேரடி விமான சேவை

மாலைத்தீவின் தேசிய விமான நிறுவனம் கொழும்புக்கும் மாலேவுக்கும் இடையே நேரடி விமான சேவையை இன்று வியாழக்கிழமை (25) முதல் தொடங்கியுள்ளது.

கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்துக்கு இந்த நிறுவனத்தின் விமானம் இன்று 138 பயணிகளுடன் வருகைதந்தது.

வாராந்தம் வியாழக்கிழமை மற்றும் சனிக்கிழமைகளில் இரண்டு விமானங்களை இயக்கப்படும் என மாலைத்தீவின் தேசிய விமான நிறுவனம் அறிவித்துள்ளது.

விமானத்தின் வருகையை நீர்ப்பீச்சுடன் சம்பிரதாயப்பூர்வமாக வரவேற்கும் நிகழ்வும் கட்டுநாயக்க விமான நிலையத்தில் இடம்பெற்றமையும் குறிப்பிடத்தக்கது.

Recommended For You

About the Author: admin