பஞ்சாப் முதல்வர் இரங்கல்

பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் நபர் ஒருவர் தமது மனைவி மற்றும் ஏழு பிள்ளைகளை கோடரியால் தாக்கி கொலை செய்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

8 மாதம் முதல் 10 வயதுக்குட்பட்ட சிறுவர்களே இவ்வாறு கொல்லப்பட்டுள்ளனர்.

வறுமை காரணமாக இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

பஞ்சாப் மாகாணத்தைச் சேர்ந்த சஜாத் கோகர் (Sajjad Khokhar) ஒரு கூலித்தொழிலாளி.

மனைவி மற்றும் ஏழு பிள்ளைகளுடன் வாழ்ந்து வந்த அவர், நிதி நெருக்கடி காரணமாக மன உளைச்சலில் இருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

இதன் காரணமாக குறித்த நபர் தமது மனைவியுடன் அடிக்கடி சண்டையிட்டு வந்ததாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட நபருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என பொலிஸாரின் அறிக்கையை மேற்கோள்காட்டி பாகிஸ்தான் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

குழந்தைகளுக்கு உணவு வழங்க முடியாமையினால் இந்த குற்றச் செயலை புரிந்ததாக குறித்த நபர் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில், பஞ்சாப் முதல்வர் மரியம் நவாஸ் உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார்.

அத்துடன், சம்பவம் தொடர்பில் விசாரணை நடத்தி அறிக்கை வழங்குமாறு பொலிஸாருக்கு அவர் பணிப்புரை விடுத்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

Recommended For You

About the Author: admin