தோனியை பார்க்க ஆசைப்பட்ட மகள்கள்

நவீன கிரிக்கெட் உலகில் ஐபிஎல் தொடர் மிகவும் பிரபலமானது. அதன் ஒவ்வொரு போட்டியும் உலகம் முழுவதும் உள்ள கிரிக்கெட் ரசிகர்களை மகிழ்ச்சியின் உச்சத்திற்கு கொண்டுச் செல்லும்.

அந்த வகையில், கடந்த திங்கட்கிழமை நடைபெற்ற சென்னை சுப்பர் கிங்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகளுக்கிடையிலான போட்டியின் பின்னர் ரசிகர் ஒருவர் தெரிவித்த கருத்து தற்போது சமூக ஊடகங்களில் வைரலாகியுள்ளது.

பிள்ளைகளின் பாடசாலைக் கட்டணத்தை கூட செலுத்த முடியாமல் இருக்கும் தந்தை ஒருவர், தனது மகள்களின் ஆசையை நிறைவேற்றும் வகையில் போட்டியை காண அழைத்துவந்திருந்தார்.

தானும், தனது பிள்ளைகளும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ரசிகர் என்றும், மகேந்திர சிங் தோனியின் தீவிர ரசிகர்கள் என்றும் தெரிவித்துள்ளனர்.

மகேந்திர சிங் தோனியை ஒரு முறையாவது நேரில் பார்க்க வேண்டும் என்ற எண்ணத்தில் இந்தப் போட்டியை பார்க்க தனது மூன்று மகள்களுடன் வந்திருந்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

“எனக்கு இந்த போட்டியை காண டிக்கெட் கிடைக்கவில்லை, எனவே நான் இதை கருப்பு சந்தையில் இருந்து அவற்றை வாங்கினேன்.

இதற்காக 64,000 ரூபாய் செலவிடப்பட்டது. எனது குழந்தைகளின் பாடசாலைக் கட்டணத்தை நான் இன்னும் செலுத்தவில்லை.

பாடசாலைக் கட்டணத்தை எப்படியாவது கட்டிவிடுவேன். ஆனால் தோனியை ஒருமுறை பார்க்க வேண்டும் என்று விரும்பினோம்.

அதனால் நானும் எனது மூன்று மகள்களும் போட்டியைக் காண சென்னை வந்தோம்” என்றார்.

Recommended For You

About the Author: admin