யாழில் கோர விபத்து: அரச அதிகாரி ஒருவர் பலி

யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற விபத்தில் படுகாயமடைந்த நிலையில் சிகிச்சைப் பெற்றுவந்த அரச அதிகாரி ஒருவர் இன்று (12.03.2024) உயிரிழந்துள்ளார்.

தென்மராட்சிக் கல்வி வலய தொழில் வழிகாட்டல் ஆலோசனை அதிகாரியான, 56 வயதுடைய கணபதிப்பிள்ளை ஈஸ்வரன் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

பாடசாலை ஒன்றில் நடைபெற்ற விளையாட்டு போட்டியில் கலந்து கொள்வதற்காக நேற்றைய தினம் வியாழக்கிழமை, கோப்பாய் – கைதடி வீதியில் மோட்டார் சைக்கிளில் பயணித்துள்ளார்.

இதன்போது, எதிரே வந்த டிப்பர் வாகனம் வேக கட்டுப்பாட்டை இழந்து மோட்டார் சைக்கிள் மீது மோதி விபத்துக்குள்ளானது.

விபத்தில் படுகாயமடைந்தவர் சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதித்த நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை உயிரிழந்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

Recommended For You

About the Author: admin