கனடாவில் தமிழ் பெண் மீது கொடூரத் தாக்குதல்: சந்தேகநபர் கைது

கனடாவில் பெண்ணொருவரை தாக்கிய சம்பவம் தொடர்பில் தமிழ் குடும்பஸ்தரர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக ரொறன்ரோ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

43 வயதான சந்தேகநபர் கடந்த 30ஆம் திகதி ரொறன்ரோவில் உள்ள டொன் மில்ஸ் (Don Mills) ரயில் நிலையத்திற்கு அருகில் பெண்ணொருவரை கொடூரமாக தாக்கியுள்ளார்.

சம்பவத்தில் பாதிக்கப்பட்ட பெண் ரொறன்ரோ பொலிஸில் செய்த முறைப்பாட்டின் பிரகாரம் இவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

பொலிஸில் முறைப்பாடு அளித்த குறித்த பெண் படுகாயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சந்தேகநபருக்கு எதிராக 4 முறைப்பாடுகள் ஏற்கனவே பதிவாகியுள்ளன. இருப்பினும் அவருக்கு எதிரான குற்றச்சாட்டுக்கள் எதுவும் நீதிமன்றத்தில் நிரூபிக்கப்படவில்லை தகவல்கள் வெளியாகியுள்ளன

Recommended For You

About the Author: admin