பொலிஸ் மா அதிபராக தேஷபந்து தென்னகோன் நியமனம்

பதில் பொலிஸ் மா அதிபர் தேஷபந்து தென்னகோன் புதிய பொலிஸ் மா அதிபராக இன்று (26) நியமிக்கப்பட்டுள்ளார்.

ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்கவிடமிருந்து தேஷபந்து தென்னகோன் நியமனக் கடிதத்தைப் பெற்றுக்கொண்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.

தேஷபந்து தென்னகோனை பொலிஸ் மா அதிபர் பதவியில் நிரந்தரமாக்குவதற்கு ஜனாதிபதியினால் முன்வைக்கப்பட்ட யோசனைக்கு இன்று அரசியலமைப்பு சபையில் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

பதில் பொலிஸ் மா அதிபர் தேஷபந்து தென்னகோனின் 03 மாத பதவிக்காலம் புதன்கிழமை (28) நிறைவடையவிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Recommended For You

About the Author: admin