தமிழக முதல்வர் மோடிக்கு அவசர கடிதம்

மீனவர்களை விடுவிக்க வலியுறுத்தி பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்

மீனவர் பிரச்சினைக்குத் தீர்வு காண கூட்டு நடவடிக்கைக் குழுவை புதுப்பிக்க வேண்டும்.

மீனவர்கள், படகுகளை உடனடியாக விடுவிக்க முயற்சி மேற்கொள்ள வேண்டும்.

இலங்கை அரசாங்கத்தால் கைது செய்யப்பட்டுள்ள தமிழ்நாட்டு மீனவர்கள், படகுகளை விடுவிக்க உரிய தூதரக நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என இந்திய பிரதமர் மோடிக்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

‘‘கடந்த டிசம்பரில் குவைத் கடலோர காவல் படையினரால் கைது செய்யப்பட்ட 4 தமிழக மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஜனவரி 3ஆம் திகதி பாகிஸ்தான் அதிகாரிகளால் சிறைபிடிக்கப்பட்ட தமிழக மீனவர்களை விடுவிக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மீனவர் பிரச்சினைக்குத் தீர்வு காண கூட்டு நடவடிக்கைக் குழுவை புதுப்பிக்க வேண்டும். இலங்கை சிறைகளில் தற்போது உள்ள 77 மீனவர்கள் மற்றும் 151 படகுகளை உடனடியாக விடுவிக்க முயற்சி மேற்கொள்ள வேண்டும்.‘‘ – இவ்வாறு குறித்த கடிதத்தில் அவர் வலியுறுத்தியுள்ளார்.

Recommended For You

About the Author: admin