யாழ்ப்பாணத்தில் இளைஞனைக் காணவில்லை

யாழ்ப்பாணத்தில் 29 வயது இளைஞர் ஒருவரைக் காணவில்லை என சுன்னாகம் பொலிசில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம், இணுவில் பிரதேசத்தைச் சேர்ந்த குறித்த இளைஞன், கடந்த 26 ஆம் திகதி வியாழக்கிழமை மதியத்திலிருந்து காணாமல் போய் உள்ளதாக அவரது உறவினர்கள் முறைப்பாடு செய்துள்ளனர்.

குறித்த இளைஞர் சற்று மனநலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுக் கொண்டு இருந்ததாகவும் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

குறித்த இளைஞன் பற்றிய தகவல் அறிந்தாலோ அல்லது அவரை எங்காவது கண்டாலோ சுன்னாகம் பொலிஸ் நிலையத்திற்கோ அல்லது இளைஞரது உறவினர்களது தொலைபேசி இலக்கங்களான 772690673 அல்லது 0776523229 அறிவிக்குமாறு பொதுமக்களிடம் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

Recommended For You

About the Author: admin