சுதந்திரதின உரையை தவிர்க்கும் ஜனாதிபதி

இன்று நள்ளிரவுடன் பாராளுமன்றக் கூட்டத்தொடர் முடிவுக்கு கொண்டுவரப்பட்டால் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவால் ஐந்தாவது கூட்டத்தொடர் பெப்ரவரி 7ஆம் ஆரம்பித்துவைக்கப்படும்.

இதேவேளை, எதிர்வரும் பெப்ரவரி 4ஆம் திகதி நடைபெறும் சுதந்திர தின நிகழ்வில் ஜனாதிபதி உரையாற்ற மாட்டார் என்றும் அரச தரப்பு செய்திகள் தெரிவிக்கின்றன.

அக்கிராசன உரை மூலம் ஜனாதிபதி நாட்டு மக்களுக்கு தமது கொள்கைப் பிரகடனத்தை வெளிப்படுத்த உள்ளதால் சுதந்திரதின உரையை தவிர்த்துள்ளதாகவும் தெரியவருகிறது.

இதேவேளை, கடந்த ஆண்டும் சுதந்திர தின நிகழ்வில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உரையாற்றியிருக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

Recommended For You

About the Author: admin