இரு பேருந்துகள் மோதி விபத்து: பலர் காயம்

ஊர்காவற்துறை – குறிகட்டுவானில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி வந்த இரண்டு பேருந்துகள் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

விபத்தில் பலரும் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இன்று காலை 6.30 மணியளவில் குறித்த விபத்து ஏற்பட்டுள்ளது.

இலங்கை போக்குவரத்து சபை பேருந்தும் தனியார் பேருந்தும் மோதுண்டதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

Recommended For You

About the Author: admin