எச்சரிக்கும் இ.போ.ச. ஊழியர் சங்கம்

சுமார் 5 வருட காலமாக தாமதமாகி வரும் இலங்கை போக்குவரத்து சபை ஊழியர்கள் மற்றும் அதிகாரிகளின் சம்பளத்தை அதிகாரப்பூர்வமாக திருத்தியமைப்பதற்கு உடனடியாக தலையிடுமாறு அகில இலங்கை இ.போ.ச. ஊழியர் சங்கம் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

இது தொடர்பில் உடனடி நடவடிக்கை எடுக்காவிட்டால், கடுமையான தொழிற்சங்க நடவடிக்கை எடுக்கப்படும் என சங்கத்தின் பொதுச் செயலாளர் சேபால லியனகே தெரிவித்துள்ளார்.

2018 ஆம் ஆண்டு தொடக்கம் இது வரையில் இ.போ.ச. ஊழியர்கள், அதிகாரிகளின் சம்பள திருத்தம் மேற்கொள்ளப்படவில்லை. இது தொடர்பில் சம்பந்தப்பட்ட அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு பல தடவைகள் தெரிவித்தும் எவ்வித பயனும் இல்லை.

சுமார் 5 வருடங்களாக நிலுவையில் உள்ள இந்த தாமதத்தை பொறுத்துக் கொள்ள முடியாது. இப்பிரச்சினைக்கு விரைவில் தீர்வு காணுமாறு ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுப்பதாகவும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

Recommended For You

About the Author: admin