விமான நிலையத்தில் முக அடையாளம் காணும் அமைப்பு

நாட்டை விட்டு தப்பிச் செல்லும் அல்லது நாட்டிற்கு வரும் குற்றவாளிகளை அடையாளம் காண பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் (BIA) தானியங்கி முக அடையாளம் காணும் அமைப்பு நிறுவப்பட்டுள்ளது.

இதனை பொது பாதுகாப்பு அமைச்சர் டிரன் அலஸ் இன்று திறந்து வைத்தார்.

கடந்த காலங்களில் குற்றச் செயல்களில் ஈடுபட்டு 42 குற்றவாளிகள் நாட்டை விட்டுத் தப்பிச் சென்றுள்ளதாகவும், அதனைத் தடுப்பதற்கு ஒரு பொறிமுறை தேவை எனவும் பதில் பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோன் தெரிவித்துள்ளார்.

இதன் பிரகாரம் புதிய தானியங்கி முக அடையாளம் காணும் அமைப்பு குற்றவாளிகள் தப்பிச் செல்வதை தடுப்பதற்கான வழிமுறையாக இருக்கும் எனவும் பொலிஸ்மா அதிபர் வலியுறுத்தியுள்ளார்.

Recommended For You

About the Author: admin