சுகாதார அமைச்சின் மற்றுமொரு அதிகாரி கைது

தரமற்ற மனித இம்யூனோகுளோபுலின் ஊசியை இறக்குமதி செய்த சம்பவம் தொடர்பில் சுகாதார அமைச்சின் மற்றுமொரு அதிகாரி இன்று (05) கைது செய்யப்பட்டுள்ளார்.

சுகாதார அமைச்சின் முன்னாள் பிரதிப் பணிப்பாளர் ஹேரத் குமாரவே சுகாதார அமைச்சில் வைத்து கைது செய்யப்பட்டதாக குற்றப் புலனாய்வுத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அவர் இன்று பிற்பகல் மாளிகாகந்த நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Recommended For You

About the Author: admin