யாழ் மாவட்ட செயலகத்திற்குள் நுழைய முற்பட்டு கைதானவர்களுக்கு பிணை

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு எதிராக யாழ்ப்பாண மாவட்ட செயலகத்திற்கு அருகில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட நான்கு பேரை நேற்றைய தினம் பொலிஸார் கைது செய்திருந்த நிலையில் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் வடக்கு விஜயத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாய் யாழ்.மாவட்ட செயலகத்திற்கு முன் அமைக்கப்பட்ட தடைகளை மீறி நுழைய முற்பட்டமை தொடர்பிலேயே குறித்த நால்வரும் கைது செய்யப்பட்டனர்.

கைது செய்யப்பட்டவர்களிடம் வாக்குமூலம் பெற்றதை தொடர்ந்து பொலிஸார் அவர்களை பிணையில் விடுவித்தனர்.

இதேவேளை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் விஜயத்தை முன்னிட்டு குறித்த பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

Recommended For You

About the Author: admin