போதைபொருள்களுடன் மீன்பிடி படகும் : அறுவர் கைது

பல நாள் மீன்பிடி படகு ஒன்று போதைப்பொருளுடன் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது.

காலிக்கு சற்று தொலைவில் உள்ள கடற்பரப்பில் வைத்து இந்த பலநாள் படகு கைது செய்யப்பட்டுள்ளதாக கடற்படை ஊடகப் பேச்சாளர் கெப்டன் கயான் விக்ரமசூரிய ஒருவன் செய்திப்பிரிவிற்கு தெரிவித்துள்ளார்.

மேலும், போதைப்பொருளுடன் 06 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

சம்பவம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதுடன், போதைப்பொருள் தொடர்பான விபரங்கள் சேகரிக்கப்பட்டு வருவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

Recommended For You

About the Author: admin