ஆசையாய் கோழிபிரியாணி வாங்கிய நபருக்கு காத்திருந்த அதிர்ச்சி!

கரப்பான் பூச்சியுடன் கோழிப்பிரியாணி பாசலை வழங்கிய பிரபல உணவகம் ஒன்றின் உரிமையாளரை மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதவான் நேற்று எதிர்வரும் 8 ஆம் திகதி நீதிமன்றில் ஆஜராகுமாறு உத்தரவிட்டு, 25 ஆயிரம் ரூபா சரீரப் பிணையில் விடுவித்துள்ளார்.

குறித்த உணவகத்தில் மட்டு போதனா வைத்தியசாலையில் பிரிவு ஒன்றில் கடமையாற்றிவரும் வைத்தியர்கள் சம்பவதினமான நேற்று விருந்து உபசாரம் ஒன்றிற்காக கோழிப்பிரியாணியை ஓடர் கொடுத்து வாங்கியுள்ளார்.

அதன்பின்னர் பிரியாணியை உண்ணுவதற்காக திறந்தபோது ஒருவரின் பார்சலில் கோழிப் பொரியல் இறைச்சியுடன் கரப்பான் பூச்சியும் பொரித்த நிலையில் இருந்துள்ளது .

இதுதொடர்பில், மட்டக்களப்பு பிரதேச சுகாதார வைத்திய அதிகாரிக்கு முறைப்பாடு தெரிவித்ததையடுத்து உடனடியாக பொதுச் சுகாதார அதிகாரிகள் குறித்த உணவகத்தை சோதனையிட்டதுடன் உணவக முதலாளியை கைது செய்து மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதவான் பீற்றர் போல் முன்னிலையில் ஆஜர்படுத்தினர்.

இதேவேளை நேறறைய தினம் பொது சுகாதார அதிகாரிகள் நகர்பகுதியில் அமைந்துள்ள உணவகங்களை முற்றுகையிட்டு சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டு பாவனைக்கு உதவாத அரிசி மூடைகள் 25 கைப்பற்றியதுடன் சுகாதாரமில்லாத பல உணவகங்களுக்கு சட்டநடவடிக்கை எடுத்துள்ளனர்.

அதுமட்மன்றி கடந்த 2 வருடத்துக்கு முன்னர் உணவகம் ஒன்றில் மலசல கூடத்தில் வைத்து இறைச்சி வெட்டிய சம்பவமும் இடம்பெற்றிருந்தது.

வாழைச்சேனையில் மாட்டு இறைச்சி கடை உரிமையாளர் ஒருவர் வீட்டின் மலசல கூடத்தில் இறைச்சிக்காக அண்மையில் மாடு வெட்டிய வசம்பவங்கள் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது

Recommended For You

About the Author: webeditor