தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்ட கடற்படை சிப்பாய்

மன்னார் – முள்ளிக்குளம் கடற்படை முகாமில் கடமையாற்றும் கடற்படை சிப்பாய் ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

கடற்படை முகாமிற்கு வெளியில் உள்ள காட்டுப் பகுதியில் உள்ள மரம் ஒன்றில் தூக்கில் தொங்கிய நிலையில் குறித்த கடற்படை சிப்பாய் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக சிலாபத்துறை பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

சடலமாக மீட்கப்பட்ட கடற்படை சிப்பாய் 33 வயதுடைய மூன்று பிள்ளைகளின் தந்தை.

உயிரிழந்த கடற்படை சிப்பாய் முள்ளிக்குளம் கடைப்படை முகாமில் உள்ள கடற்படையினரின் விடுதியில் தனது குடும்பத்தினருடன் வசித்து வந்துள்ளார.

நேற்று முன்தினம் 2 ஆம் திகதி முதல் கணவரை காணவில்லை என அவரது மனைவி பொலிஸில் முறைப்பாடு வழங்கியிருந்தார்.

இந்நிலையிலேயே குறித்தநபர் தூக்கில் தொங்கிய நிலையில் இன்று காலை சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை சிலாபத்துறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Recommended For You

About the Author: admin