தெமட்டகொட பகுதியில் துப்பாக்கி உள்ளிட்ட போதைபொருட்கள் மீட்பு

கொழும்பு – வடக்கு குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் இன்று காலை தெமட்டகொட ஆராமய வீதியில் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இச்சோதனையின் போது, ​​இலங்கையில் தயாரிக்கப்பட்ட சிறிய ரக துப்பாக்கி, இரண்டு ஒன்பது மி.மீ. தோட்டாக்கள், 15 கிராம் ஹெரோயின், பதினெட்டு மில்லிகிராம் தோட்டாக்கள் மற்றும் கையடக்கத் தொலைபேசியும் சந்தேக நபரிடம் இருந்து கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

குறித்த சந்தேகநபர் நீதிமன்றில் இன்று முன்னிலைப்படுத்தப்பட்ட நிலையில் விளக்கமறியலில் வைக்க நீதவான் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

மேலும், சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.

Recommended For You

About the Author: admin