லயன் குடியிருப்பில் தீப்பரவல்

தலவாக்கலை, லிந்துலை பெரிய இராணிவத்தை (ரஹான்வத்த) தோட்டத்தில் இன்று (04) அதிகாலை ஏற்பட்ட தீப்பரவலில் மூன்று குடியிருப்புகள் சேதமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

தோட்ட குடியிருப்பொன்றில் ஏற்பட்ட தீயை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்ட நிலையில், பாரியளவிலான சேதம் தவிர்க்கப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

குறித்த தீப்பரவலினால் இரண்டு வீடுகள் பகுதியளவிலும், ஒரு வீடு முற்றாக எரிந்து போயுள்ளதுடன், உயிர்ச்சேதம் எதுவும் ஏற்படவில்லை என லிந்துலை பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இதன் காரணமாக குறித்த மூன்று வீடுகளில் வசித்து வந்த சுமார் 10 பேர் வேறு இடத்திற்கு மாற்றப்பட்டுள்ளதுடன், அவர்களை தற்காலிகமாக தங்கவைப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

Recommended For You

About the Author: admin