பொருளாதார வீழ்ச்சிக்கு காரணமானவர்கள் தங்கள் கட்சியுடன் இணைந்துகொள்ள மாட்டார்கள் என ஐக்கிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது.
பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலர் அண்மையில் ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணைந்துகொண்டமை தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர்களான ஹர்ஷ டி சில்வா மற்றும் எரான் விக்ரமரத்ன ஆகியோர் ஊடகங்களுக்கு கருத்துரைக்கையிலே இந்த விடயத்தை தெரிவித்துள்ளனர்.
இதன்படி, பொருளாதார வீழ்ச்சிக்கு காரணமானவர்களுடன் ஒன்றிணைவதற்கு தயாரில்லை எனவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
தமது கட்சியுடன் இணைந்துகொள்ள விரும்புபவர்கள் தூய்மையானவர்களாகவும் எமது பொருளாதாரக் கொள்கைகளை ஏற்றுக்கொள்ளவதற்கு தயாராகவும் இருக்க வேண்டுமெனவும் தெரிவித்துள்ளனர்.