டலஸ் காட்டிக்கொடுத்த துரோகி

சுதந்திர மக்கள் காங்கிரஸின் தலைவர் டலஸ் அழகப்பெரும எதிர்காலத்தில் தேசிய மக்கள் சக்தியில் இணையலாம் என பாராளுமன்ற உறுப்பினர் டிலான் பெரேரா தெரிவித்துள்ளார்.

”எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தலைமையில் அமைக்கப்பட உள்ள புதிய கூட்டணியில் டலஸ் அழகப்பெரும இணையவில்லை. டலஸ் ஒரு துரோகி என்றே கூற வேண்டும்.

சுதந்திர மக்கள் காங்கிரஸின் அனைவராலும் கைவிடப்பட்ட தனிநபராக தற்போது இருக்கிறார். அனைவரும் கைவிட்டுள்ளதால் அவர் தேசிய மக்கள் சக்தியில் இணைந்துக்கொள்ளவே அதிக வாய்ப்புள்ளது.

அதேபோன்று சுதந்திர மக்கள் காங்கிரஸில் உள்ள சிலர் நாசகாரர்கள். குறிப்பாக சரித ஹேரத் மற்றும் நாலக கொடஹேவா ஆகியோர் பாராளுமன்றத்தில் தம்முடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அவர்கள் குழப்பகரமான சூழலை தோற்றுவிக்கவே முற்படுகின்றனர்.” எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

Recommended For You

About the Author: admin