யாழில் கேரள கஞ்சாவுடன் நபரொருவர் கைது!

யாழ்.நகரில் 8.5 Kg கிலோ கிராம் கஞ்சாவுடன் ஒருவர் மாவட்ட குற்றத்தடுப்பு பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

யாழ்.நயினாதீவை சேர்ந்த 39 வயதுடைய ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த நபர் நயினாதீவிலிருந்து கொழும்பிற்கு அனுப்புவதற்காக கஞ்சாவினை கொண்டு வந்த நிலையில் மாவட்ட குற்றத்தடுப்பு பொலிஸாருக்கு கிடைத்த தகவலையடுத்து சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்த கைது நடவடிக்கையினை பிரதானபொலிஸ் பரிசோதகர் நிகால் பிரான்சிஸ் தலைமையின் கீழ் செயற்படும் மாவட்ட குற்றத்தடுப்பு பொலிஸ் பிரிவில் செயற்படும் பொலிஸ் பரிசோதகர் மேனன் தலைமையிலான அணி முன்னெடுத்துள்ளது.

Recommended For You

About the Author: webeditor