வடக்கு ரயில் பாதை ஆறு மாதங்களுக்கு மூடப்படும்

வடக்கு புகையிரத பாதையை நவீனமயமாக்கும் திட்டத்தின் இரண்டாம் கட்டம் ஜனவரி 07 ஆம் திகதி ஆரம்பிக்கப்படும் என ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

அதன் காரணமாக 07 ஆம் திகதி முதல் வடக்கு ரயில்வே பாதையின் மஹவ தொடக்கம் அநுராதபுரம் வரையான பகுதி 06 மாத காலத்திற்கு மூடப்படும் என ரயில்வே திணைக்களத்தின் பிரதி ஆணையாளர் என்.ஜே .ண்டிபோலகே தெரிவித்துள்ளார்.

இந்த காலப்பகுதியில் கொழும்பில் இருந்து மஹவ மற்றும் அநுராதபுரத்திலிருந்து காங்கசன்துறை வரை மட்டுமே ரயில் சேவைகள் இடம்பெறும் என்றும் அவர் வலியுறுத்தியிருந்தார்.

முதல் கட்ட திருத்தப் பணி அநுராதபுரம் முதல் மதவாச்சி முன்னெடுக்கப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Recommended For You

About the Author: admin