கைத்துப்பாக்கியுடன் ஒருவர் கைது

யுக்திய நடவடிக்கையின் கீழ் மேற்கொள்ளப்பட்ட தேடுதலில் கொலை ஒன்றை செய்ய தயாராக இருந்த ஹீனடியன மஹேஷின் சகா ஒருவரை பொலிஸார் கட்டுநாயக்கவில் கைது செய்துள்ளனர்.

கட்டுநாயக்க பொலிஸார் இந்த நபரை கைது செய்துள்ளதுடன் அவரிடம் இருந்து 9 மில்லி மீட்டர் ரக துப்பாக்கிக்கான 5 தோட்டக்களையும் கைப்பற்றியுள்ளனர்.

தான் ஹீனடியன மஹேஷின் சகா எனவும் இரண்டு வர்த்தகர்களை கொலை செய்யும் ஒப்பந்தம் தமக்கு வழங்கப்பட்டிருந்ததாகவும் பொலிஸார் நடத்திய விசாரணைகளின் போது சந்தேக நபர் கூறியுள்ளார்.

இதனையடுத்து கொலைக்கு பயன்படுத்தப்படவிருந்த 9 மில்லி மீட்டர் ரக கைத்துப்பாக்கி,அதற்கான சில தோட்டக்களையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

பதில் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோனின் வழிக்காட்டலின் கீழ் நீர்கொழும்பு சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் அனுருத்த பண்டாரநாயக்கவின் கண்காணிப்பின் கீழ் இந்த தேடுதல் நடத்தப்பட்டுள்ளது.

Recommended For You

About the Author: admin