பெண்ணுடன் சென்ற நபர் மரணம்: தப்பியோடிய பெண்

வீதியில் சமுபாகர மாவத்தையில் உள்ள தங்கும் விடுதிக்கு பெண்ணுடன் சென்ற ஒருவர் திடீரென உயிரிழந்ததை அடுத்து, அவருடன் சென்ற பெண் இரகசியமாக தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பொரலஸ்கமுவ வேரஹெர போதிராஜபுர பிரதேசத்தை சேர்ந்த 55 வயதான நபரே உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்த நபர் தப்பியோடிய பெண்ணுடன் நேற்று (25) மதியம் தங்கும் விடுதிக்கு சென்றுள்ளார். அவர்கள் அறையில் சில மணி நேரம் தங்கியிருந்த நிலையில், பெண் கத்தியவாறு அறையில் இருந்து வெளியில் வந்து, அந்த நபருக்கு சுகவீனம் ஏற்பட்டுள்ளதாக விடுதியின் முகாமையாளரிடம் கூறியுள்ளார்.

இதனையடுத்து முகாமையாளர் அறைக்கு சென்று பார்த் போது, அறையில் தங்கியிருந்த நபரின் வாயில் நுரை தள்ளி இருப்பதை பார்த்து, அவரை வைத்தியசாலைக்கு கொண்டு செல்ல முச்சக்கர வண்டியை கொண்டு வர விடுதியில் இருந்து வெளியில் சென்றுள்ளார்.

அந்த சந்தர்ப்பை பயன்படுத்தி பெண் தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

சம்பவம் தொடர்பாக பொரலஸ்கமுவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Recommended For You

About the Author: admin