திருட்டில் ஈடுபட்ட சுற்றுலா வழிக்காட்டி

செல்போன் திருட்டில் ஈடுபட்ட வந்த கொழும்பில் உள்ள பிரதான நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் சுற்றுலா வழிக்காட்டியாக பணியாற்றும் ஒருவரை 8 லட்சம் ரூபா பெறுமதியான செல்போனுடன் கைது செய்ததாக அத்துருகிரிய பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சந்தேக நபர், ஹோமாகம,மீகொட, அத்துருகிரிய, நுகேகொடை பிரதேசங்களில் செல்போன் விற்பனை நிலையங்கள், வீதியில் நிறுத்தப்பட்டிருந்த வாகனங்களில் இருந்து பெறுமதியான செல்போன்களை கொள்ளையிட்டு வந்துள்ளார்.

எத்தனை செல்போன்களை கொள்ளையிட்ட என்பதை சந்தேக நபர் மறந்து போயுள்ளதாகவும் திருடும் செல்போன்களை விற்று சந்தேக நபர் மதுபானம் அருந்தியுள்ளதாகவும் அவர் மதுபானத்திற்கு அடிமையானவர் எனவும் பொலிஸார் கூறியுள்ளனர்.

மீகொட,நாவலமுல்ல ஹோரகஸ்ஹேன பிரதேசத்தை சேர்ந்த 53 வயதான நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

Recommended For You

About the Author: admin