நாடளாவிய ரீதியில்: சுனாமி நினைவேந்தல்கள்

அம்பாறை மாவட்டம்

சுனாமி அனர்த்தத்தில் உயிரிழந்தோருக்கு அம்பாறை மாவட்ட உறவுகள் உணர்வு பூர்வமாக அஞ்சலி செலுத்தியுள்ளனர்.

யாழ்ப்பாணம் – வடமராட்சி கிழக்கு

இலங்கையில் இலட்சக்கணக்கான மக்களின் உயிர்களை காவு கொண்ட ஆழிப்பேரலையின் 19 ஆம் ஆண்டு நினைவேந்தல் உணர்வுபூர்வமாக யாழ்ப்பாணம் – வடமராட்சி கிழக்கில் இடம்பெற்றது.

மன்னார்

சுனாமி ஆழிப்பேரலையினால் உயிரிழந்தவர்களின் 19 வது ஆண்டு நினைவு நாள் இன்று (26) மன்னாரில் நினைவு கூறப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு

சுனாமி ஏற்பட்டு 19ஆண்டு நினைவு இன்று உணர்வுபூர்வமாக அனுஸ்டிக்கப்பட்டது.மட்டக்களப்பு மாவட்டத்தில் உணர்வுபூர்வமாக சுனாமி அனர்த்த நினைவேந்தல் நிகழ்வுகள் நடைபெற்றன.

வவுனியா

வவுனியா – குட்செட்வீதி கருமாரியம்மன் ஆலயத்தில் 19ம் ஆண்டு சுனாமி நினைவு தினம் இன்று காலை அனுஸ்டிக்கப்பட்டது.

மலையகம்

சுனாமி ஆழிப்பேரலை இடம்பெற்று 26.12.2023 அன்றுடன் 19 ஆண்டு நிறைவடைவதை நினைவு கூரும் வகையில் உயிரிழந்த உறவுகளுக்கு மலையக மக்கள் தமது அஞ்சலியை செலுத்தினர்.

யாழ் பல்கலைக்கழகம்

ஆழிப்பேரலையில் உயிர்நீத்த உறவுகளுக்கான 19ஆவது ஆண்டு நினைவேந்தல் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் இன்றைய தினம் முன்னெடுக்கப்பட்டது.

யாழ். மாவட்ட செயலகம்

யாழ். மாவட்ட செயலக அனர்த்த முகாமைத்துவ பிரிவின் ஏற்பாட்டில் தேசிய பாதுகாப்பு தினம் இன்றைய தினம் யாழ் மாவட்டச் செயலகத்தில் இடம்பெற்றது.

Recommended For You

About the Author: admin