நத்தார் மது விருந்தில் கொலை

வெலிகடை, விஜிதபுர,வல்பொல பிரதேசத்தில் நேற்றிரவு ஒருவர் தாக்கி கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

வல்பொல பிரதேசத்தை சேர்ந்த 45 வயதான நபரே சம்பவத்தில் கொல்லப்பட்டுள்ளார்.

இந்த நபர் நத்தார் பண்டிகையை முன்னிட்டு மேலும் மூன்று பேருடன் இணைந்து மது விருந்து நடத்தியுள்ளார். அப்போது ஏற்பட்ட வாக்குவாதம் முற்றியதில் இந்த கொலை நடந்துள்ளது.

கொலை சம்பவம் தொடர்பாக சந்தேகத்தின் பேரில் அங்கொடை பிரதேசத்தை சேர்ந்த 62 வயதான நபர் கைது செய்யப்பட்டுள்ளார். கொல்லப்பட்டவரின் உடல் முல்லேரியா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பாக வெலிகடை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Recommended For You

About the Author: admin