கெஹெலிய வீட்டிற்குச் சென்ற CID

முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவின் வீட்டிற்கு குற்றவியல் விசாரணை திணைக்கள அதிகாரிகள் சென்றுள்ளனர்.

தரமற்ற இம்யூனோகுளோபுலின் (Immunoglobulin) தடுப்பூசியினை இறக்குமதி செய்தமை தொடர்பில் வாக்குமூலம் பதிவு செய்யும் வகையில் குறித்த குழுவினர் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த நிலையில், முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவின் வாக்குமூலம் கவனத்தில் எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.

தரமற்ற இம்யூனோகுளோபுலின் (Immunoglobulin) தடுப்பூசி இறக்குமதி தொடர்பில் அரச மருத்துவ வழங்கல் பிரிவின் பணிப்பாளர், உதவிப் பணிப்பாளர், கணக்காளர் உள்ளிட்ட நால்வர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Recommended For You

About the Author: admin