யாழில் போதை பொருளை எடுத்து கொண்ட இரு பெண்கள் கைது!

யாழ்ப்பாணத்தில் பாழடைந்த வீடு ஒன்றுக்குள் வைத்து போதைப் பொருளை நுகர்ந்து கொண்டிருந்த 2 பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்களை நேற்றிரவு பொலிஸார் கைது செய்ததுடன் அவர்கள் வசமிருந்த 2 கிராம் போதைப் பொருளையும் கைப்பற்றியுள்ளனர்.

யாழ்ப்பாணம் பொம்மை வெளிப் பகுதியில் உள்ள பாழடைந்த வீடு ஒன்றில் வைத்து போதைப் பொருளை நுகர்ந்து கொண்டிருப்பதாக, யாழ். மாவட்ட குற்றத் தடுப்பு பிரிவு பொலிஸாருக்கு கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில் குறித்த 2 பெண்களும் யாழ். மாவட்ட குற்றத் தடுப்பு பிரிவின் போதைத் தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரி சாயிமேனன் தலைமையிலான குழுவினரால் கைது செய்யப்பட்டனர்.

மேலும் இவர்கள் 28 மற்றும் 29 வயது மதிக்கத்தக்க 2 பெண்களே இவ்வாறு கைது செய்யப்பட்டதுடன், விசாரணைகளுக்கு பின்னர் சந்தேக நபர்களை நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கும் பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

Recommended For You

About the Author: webeditor