ஆயிரத்திற்கும் மேற்பட்ட கைதிகளுக்கு பொது மன்னிப்பு

கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு தெரிவுசெய்யப்பட்ட கைதிகளுக்கு விசேட பொது மன்னிப்பு வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, நாடளாவிய ரீதியில் உள்ள 1004 கைதிகளுக்கு இவ்வாறு ஜனாதிபதியினால் பொது மன்னிப்பு வழங்கப்பட்டுள்ளது.

விடுவிக்கப்படும் கைதிகளில் 989 ஆண்களும் 15 பெண்களும் அடங்குவதாக சிறைச்சாலைகள் ஆணியாளர், ஊடகப் பேச்சாளர் காமினி பி.திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

இதற்கமைய, பல்லேகல சிறைச்சாலையில் இருந்து 162 பேரும், மஹர சிறைச்சாலையில் இருந்து 78 பேரும், அனுராதபுரம் சிறைச்சாலையில் இருந்து 48 பேரும், மட்டக்களப்பு சிறைச்சாலையில் இருந்து 47 பெரும், வெலிக்கடை சிறைச்சாலையில் இருந்து 42 கைதிகளும் விடுவிக்கப்படவுள்ளனர்.

Recommended For You

About the Author: admin