தொலைபேசியால் சிக்கிய கொலையாளி

தொலைபேசி தரவுகளை ஆய்வு செய்து கொலை சம்பவம் தொடர்பாக தேடப்பட்டு வந்த சந்தேக நபரை பொலிஸார் நேற்று மதியம் கைது செய்துள்ளனர்.

கடந்த நவம்பர் மாதம் 28 ஆம் திகதி வத்தளை ஹெலகந்த பிரதேசத்தில் உள்ள ஹோட்டல் ஒன்றில் ஒருவர் வெட்டிக்கொலை செய்யப்பட்டார்.

இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்திய வத்தளை பொலிஸார் சந்தேக நபரை கைது செய்துள்ளனர்.

தொலைபேசி தரவு ஆய்வு அறிக்கையின் மூலம் சந்தேக நபர் தொடர்பான தகவலை உறுதிப்படுத்திய பின்னர், அவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

சந்தேக நபர் கொழும்பு 15 பிரதேசத்தை சேர்ந்த 29 வயதான நபர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபரை பரிசோதித்த போது, அவரிடம் இருந்து 4.15 கிராம் ஹெரோயின் போதைப் பொருளையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

சந்தேக நபர் நீதவான் முன்னிலையில் ஆஜர்ப்படுத்தப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

Recommended For You

About the Author: admin