பருத்திதுறையில் அதிரடியாக 30 பேர் கைது

மோப்ப நாயின் உதவியுடன் பருத்தித்துறை பொலிஸாரால் முன்னெடுக்கப்பட்டு வரும் விசேட போதைப் பொருள் ஒழிப்பு நடவடிக்கையின் போது 30 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

விசேட போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கை பருத்தித்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதிகளிலும் கடந்த 17 ஆம் திகதி முதல் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

பருத்தித்துறை தலைமைப்பீட பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பியந்த அமரசிங்க தலைமையில் நேற்று நடத்தப்பட்ட விசேட சோதனை நடவடிக்கையின் போது ஆறு பேர் போதைப்பொருள் குற்றப்பின்னணியில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பருத்தித்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் நீண்டகாலமாக சட்டவிரோதமான முறையில் போதைப்பொருள் விற்பனை மற்றும் சட்டவிரோத மதுபானம் தயாரித்து விற்பனையில் ஈடுபட்டுவரும், அடையாளம் காணப்பட்ட இடங்களில் மோப்ப நாயின் உதவியுடன் தீடீர் சோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

Recommended For You

About the Author: admin